Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: ராசிபுரம்- வநேத்ரா முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்
கணினி பயன்பாட்டியல் மற்றும் தரவு அறிவியல் துறையானது, சென்னை மற்றும் சேலம் மாநகரங்களில் இயங்கி வரும் பிரபல ஐ.டி நிறுவனமான ஐராவத் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்நிகழ்ச்சியானது கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஐராவத் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சார்பாக நிறுவனத்தின்
இயக்குநர் கௌதம் ரவிச்சந்திரன், கல்லூரியின் சார்பில் முதல்வர் முனைவர்
எஸ்.பி.விஜியகுமார், கணினி பயன்பாட்டியல் மற்றும் தரவு அறிவியல்
துறையின் துறைத்தலைவர் முனைவர் வி.விஜயதீபா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சிக்கு கல்லூரியின் இயக்குநர் கல்வி முனைவர் இரா.செல்வகுமரன்
முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஐராவத் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநர் கௌதம் ரவிச்சந்திரன், செயற்கை நுண்ணறிவு மற்றும் வணிக நுண்ணறிவு ஆகிய துறைகளில் குவிந்துள்ள வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக கல்லூரி மாணாக்கர்களுக்கு சமீபத்திய
தொழில்நுட்பங்கள், இன்டர்ன்ஷிப் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல் தொழில் நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது குறிப்படத்தக்கது.